என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "குஜராத் டைட்டன்ஸ்"
- அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மில்லர் 23 பந்தில் 55 குவித்து ஆட்டமிழந்தார்.
- டெல்லி அணி தரப்பில் ராசிக் தார் சலாம் 3 விக்கெட்டும் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி டெல்லி அணியின் பிரித்வி ஷா, மெக்கர்க் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மெக்கர்க் வழக்கும்போல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். என்றாலும் 14 பந்தில் 23 ரன்கள் எடுத்த நிலையில் சந்தீப் வாரியர் பந்தில் ஆட்டமிழந்தார்.
அடுத்த சிறிது நேரத்தில் பிரித்வி ஷா 11 ரன்னிலும் ஷாய் ஹோப் 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.இதனையடுத்து ஜோடி சேர்ந்த அக்சர் பட்டேல் -ரிஷப் பண்ட் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் அரை சதம் விளாசினர்.
இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து கொடுத்தது. அக்சர் பட்டேல் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ஸ்டப்ஸ் மற்றும் ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.
ரிஷப் பண்ட் 43 பந்தில் 88 ரன்கள் எடுத்தும், ஸ்டப்ஸ் 7 பந்தில் 26 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் குவித்தது. குஜராத் அணி தரப்பில் மோகித் சர்மா 4 ஓவரில் 73 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.
இதனையடுத்து குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில்- சஹா களமிறங்கினர். சுப்மன் கில் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து சஹா- சுதர்சன் ஜோடி பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுதர்சன் அரை சதம் விளாசினார்.
39 ரன்களில் இருந்த போது சஹா அவுட் ஆனார். உடனே சாய் சுதர்சனும் 65 ரன்னிலும் வெளியேறினார். அடுத்து வந்த உமர்சாய் 1, ஷாருக்கான் 8, தெவாடியா 4 என வெளியேறினார். இதனையடுத்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மில்லர் (55) அரை சதம் விளாசி அவுட் ஆனார்.
இதனால் கடைசி ஓவரில் குஜராத் அணிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. முதல் 2 பந்துகளை பவுண்டரிக்கு விரட்டிய ரஷித்கான் 3,4-வது பந்தை டாட் செய்தார். 5-வது பந்தை சிக்சர் பறக்கவிட்டார். இதனால் கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டது. அந்த பந்தை ரன் ஏதும் விட்டுக் கொடுக்கவில்லை.
இதனால் டெல்லி அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. டெல்லி அணி தரப்பில் ராசிக் தார் சலாம் 3 விக்கெட்டும் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- இரு அணிகளும் இதுவரை ஏழு போட்டிகளில் விளையாடி உள்ளன.
- குஜராத் அணி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இரண்டாவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
மொஹாலியில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு துவக்க வீரர்களான கேப்டன் சாம் கர்ரன் மற்றும் பிரப்சிம்ரன் சிங் சுமாரான துவக்கத்தை கொடுத்தனர்.
இந்த ஜோடி முறையே 20 மற்றும் 35 ரன்களை குவித்து ஆட்டமிழந்தது. அடுத்து வந்த ரோசோ, ஜிதேஷ் ஷர்மா, லியம் லிவிங்ஸ்டன் முறையே 9, 13 மற்றும் 6 ரன்களுக்கு ஆட்டமிழக்க பஞ்சாப் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
போட்டி முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்களை குவித்தது. குஜராத் சார்பில் சிறப்பாக பந்துவீசிய சாய் கிஷோர் நான்கு விக்கெட்டுகளையும், மோகித் சர்மா, நூர் அகமது தலா இரண்டு விக்கெட்டுகளையும் ரஷித் கான் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
- இரு அணிகளும் இதுவரை ஏழு போட்டிகளில் விளையாடி உள்ளன.
- குஜராத் அணி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இரண்டாவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
மொஹாலியில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. நடப்பு ஐ.பி.எல். தொடரில் இரு அணிகளும் இதுவரை ஏழு போட்டிகளில் விளையாடி உள்ளன. குஜராத் டைட்டன்ஸ் அணி மூன்று போட்டிகளில் வெற்றி நான்கு போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் அணி இரண்டு போட்டிகளில் வெற்றி, ஐந்து போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது. புள்ளிகள் பட்டியலில் இரு அணிகளும் பின்தங்கியுள்ள நிலையில், இன்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்குகின்றன.
- அபிஷேக் பொரெல் மற்றும் ஷாய் ஹோப் சிறப்பாக ஆடினர்.
- சந்தீப் வாரியர் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 32 ஆவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
குஜராத் அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய ரித்திமான் சாஹா மற்றும் கேப்டன் சுப்மன் கல் சுமாரான துவக்கத்தை கொடுத்தனர். இருவரும் முறையே 2 மற்றும் 8 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய சாய் சுதர்சன் மற்றும் டேவிட் மில்லர் ஜோடியும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க குஜராத் அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
டெல்லி சார்பில் சிறப்பாக பந்துவீசிய முகேஷ் குமார் மூன்று விக்கெட்டுகளையும் ஸ்டப்ஸ், இஷாந்த் சர்மா தலா 2 விக்கெட்டுகளையும், அக்சர் பட்டேல், கலீல் அகமது தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதன் மூலம் குஜராத் அணி 17.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 89 ரன்களை குவித்தது. அந்த வகையில், ஐ.பி.எல். தொடரில் குறைந்த பட்ச ரன்களை குஜராத் அணி பதிவு செய்தது.
குறைந்த இலக்கை துரத்திய டெல்லி அணி துவக்கத்திலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியின் பிரித்வி ஷா 7 ரன்களிலும், ஜேக் ஃபிரேசர் 20 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய அபிஷேக் பொரெல் மற்றும் ஷாய் ஹோப் சிறப்பாக ஆடினர்.
அபிஷேக் பொரெல் 15 ரன்களிலும், ஷாய் ஹோப் 19 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன் மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 8.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 92 ரன்களை குவித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குஜராத் அணி சார்பில் சந்தீப் வாரியர் 2 விக்கெட்டுகளையும், ரஷித் கான் மற்றும் ஜான்சன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
- குஜராத் அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
- முகேஷ் குமார் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 32 ஆவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
குஜராத் அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய ரித்திமான் சாஹா மற்றும் கேப்டன் சுப்மன் கில் சுமாரான துவக்கத்தை கொடுத்தனர். இருவரும் முறையே 2 மற்றும் 8 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய சாய் சுதர்சன் மற்றும் டேவிட் மில்லர் ஜோடியும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க குஜராத் அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
டெல்லி சார்பில் சிறப்பாக பந்துவீசிய முகேஷ் குமார் மூன்று விக்கெட்டுகளையும் ஸ்டப்ஸ், இஷாந்த் சர்மா தலா 2 விக்கெட்டுகளையும், அக்சர் பட்டேல், கலீல் அகமது தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதன் மூலம் குஜராத் அணி 17.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 89 ரன்களை குவித்தது. அந்த வகையில், ஐ.பி.எல். தொடரில் குறைந்த பட்ச ரன்களை குஜராத் அணி பதிவு செய்தது.
- குஜராத் அணி மூன்று போட்டிகளில் தோல்வியுற்றது.
- டெல்லி அணி புள்ளி பட்டியலில் பின்தங்கியுள்ளது.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 32 ஆவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. குஜராத் டைட்டன்ஸ் அணி இதுவரை விளையாடிய ஆறு போட்டிகளில் மூன்று வெற்றி, மூன்று தோல்விகளை சந்தித்துள்ளது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஆறு போட்டிகளில் இரண்டு வெற்றி, மூன்று தோல்விகளை சந்தித்துள்ளது. இரு அணிகளும் புள்ளிகள் பட்டியலில் பின்தங்கியுள்ள நிலையில், இன்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்குகின்றன.
- புள்ளிபட்டியலில் குஜராத் அணி 6-வது இடத்தில் உள்ளது.
- டெல்லி அணி 6 போட்டிகளில் விளையாடி 2 மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
முன்னாள் சாம்பியனான குஜராத் அணி இதுவரை 6 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி (மும்பை, ஐதராபாத், ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக), 3 தோல்வி (சென்னை, பஞ்சாப், லக்னோ அணிகளிடம்) கண்டுள்ளது. முந்தைய ஆட்டத்தில் ராஜஸ்தான் நிர்ணயித்த 197 ரன் இலக்கை கடைசி பந்தில் எட்டிப்பிடித்தது.
அந்த ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரர்களான சுப்மன் கில், சாய் சுதர்சன் வலுவான அடித்தளம் அமைத்தனர். ஆனால் மிடில் வரிசை பேட்டிங்கில் தடுமாற்றம் இருக்கிறது. அதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானதாகும். பந்து வீச்சில் ரஷித் கான், மொகித் ஷர்மா, உமேஷ் யாதவ், நூர் அகமது வலுசேர்க்கிறார்கள்.
டெல்லி அணி தனது முதல் 2 ஆட்டங்களில் பஞ்சாப், ராஜஸ்தான் அணிகளிடம் தோற்றது. 3-வது ஆட்டத்தில் சென்னையை வீழ்த்தியது. அடுத்த 2 ஆட்டங்களில் கொல்கத்தா, மும்பையிடம் பணிந்தது. கடந்த ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோவை எளிதில் தோற்கடித்தது.
டெல்லி அணியில் பேட்டிங்கில் கேப்டன் ரிஷப் பண்ட், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், டேவிட் வார்னர், பிரித்வி ஷாவும், பந்து வீச்சில் கலீல் அகமது, குல்தீப் யாதவ், முகேஷ் குமார், இஷாந்த் ஷர்மாவும் நல்ல நிலையில் உள்ளனர். மூன்று துறைகளிலும் அந்த அணி நிலையான திறனை வெளிப்படுத்த வேண்டியது முக்கியமானதாகும். கடந்த ஆட்டத்தில் கிடைத்த வெற்றி உத்வேகத்தை தொடர இரு அணிகளும் தீவிரம் காட்டுகிறார்கள். இருப்பினும் உள்ளூர் அனுகூலத்துடன் களம் காணும் குஜராத்தை சமாளிப்பது டெல்லி அணிக்கு சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
- ஆர்சிபி ஆறு போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று கடைசி இடம்.
- பஞ்சாப், மும்பை, டெல்லி அணிகள் தலா இரண்டு வெற்றிகள் மூலம் முறையே 7 முதல் 9 இடங்களை பிடித்துள்ளன.
ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணைகளைத் தவிர மற்ற எட்டு அணியிகள் தலா 6 போட்டிகளில் விளையாடி முடித்து விட்டன.
நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே 20 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியே வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
இதுவரை நடந்துள்ள போட்டிகள் முடிவில் ஒவ்வொரு அணிகளும் புள்ளிகள் பட்டியலில் எந்த இடத்தில் உள்ளன என்பதை பார்ப்போம்...
ராஜஸ்தான் ராயல்ஸ் 6 போட்டியில் ஐந்தில் வெற்றி பெற்று பத்து புள்ளிகளுடன் முதல் இடம் வகிக்கிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐந்து போட்டியில் நான்கில் வெற்றி பெற்று எட்டு புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் ஆறு போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்று 8 புள்ளிகள் உடன் 3-வது இடம் வகிக்கிறது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் தலா மூன்று வெற்றிகள் பெற்றுள்ளன. ரன் ரேட் அடிப்படையில் சன் ரைசர்ஸ் 4-வது இடத்தையும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஐந்தாவது இடத்தையும், குஜராத் ஆறாவது இடத்தையும் பிடித்துள்ளன.
பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய மூன்று அணிகள் தலா இரண்டு வெற்றிகள் பெற்று ரன்ரேட் அடிப்படையில் முறையே 7 முதல் 9 இடங்களை பிடித்துள்ளன.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆறு போட்டியில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று இரண்டு புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.
ஐபிஎல் தொடரில் ஒரு அணி பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால், 10 இடங்களில் வெற்றி பெற வேண்டும். ஒன்பது அல்லது எட்டு இடங்களில் வெற்றி பெற்றால் மற்ற அணிகளின் ரன்ரேட், வெற்றித் தோல்வி ஆகியவற்றை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்.
தற்போதைய நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆறில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இன்று சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் மோதுகிறது. இந்த போட்டியில் இருந்து அந்த அணி மீதமுள்ள 8 போட்டிகளிலும் வெற்றி பெற்றே தீர வேண்டும்.
இன்றைய போட்டியில் தோல்வியடைந்தால் ஏறக்குறைய போட்டியிலிருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்படும். ஆகவே ஆர்.சி.பி. அணிக்கு இன்றைய போட்டியிலிருந்து அனைத்து போட்டிகளும் சால்வா? சாவா? போட்டிகள் போன்றே கருதப்படும்.
பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இன்னும் ஒரு போட்டியில் தோல்வியடைந்தால் கூட பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேற முடியும்.
- குஜராத் அணி தரப்பில் சுப்மன் கில் 72 ரன்களை எடுத்திருந்தார்.
- ராஜஸ்தான் தரப்பில் குல்தீப் சென் 3 விக்கெட்டுகளையும் சாஹல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
ஐபிஎல் தொடரின் 24-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் சுப்மன் கில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 196 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரியான் பராக் 76, சஞ்சு சாம்சன் 68 ரன்களும் எடுத்திருந்தனர்.
இதனையடுத்து குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில்- சாய் சுதர்சன் களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 64 ரன்கள் எடுத்தது. சிறப்பாக விளையாடிய சுதர்சன் 35 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மேத்யூ வேட் 4, மனோகர் 1, விஜய் சங்கர் 16 என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் அரை சதம் அடித்தார். அவர் 72 ரன்னில் வெளியேறினார். இம்பேக்ட் பிளேயராக வந்த ஷாருக்கான் 8 பந்தில் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து ராகுல் தெவாட்டியா- ரஷித்கான் ஜோடி அணியை வெற்றிபாதைக்கு அழைத்து சென்றது. இறுதி ஓவரில் குஜராத் அணிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது. முதல் 3 பந்தில் ரஷித்கான் 10 ரன்கள் எடுத்தார். அடுத்த பந்தில் 1 ரன் எடுத்தார். 5-வது பந்தில் தெவாட்டியா 3 ரன்கள் எடுக்க முயற்சித்து 2 ரன்னில் ரன் அவுட் ஆனர். கடைசி பந்தில் குஜராத் அணிக்கு 2 ரன்கள் தேவை என்ற நிலையில் ரஷித்கான் அந்த பந்தை பவுண்டரி அடித்து வெற்றி பெற வைத்தார்.
ராஜஸ்தான் தரப்பில் குல்தீப் சென் 3 விக்கெட்டுகளையும் சாஹல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
- ரஷித் கான் பந்தில் இரண்டு முறை ரியான் பராக் அவுட்டில் இருந்து தப்பினார்.
- சஞ்சு சாம்சன், ரியான் பராக் அரைசதம் விளாசினர்.
ராஜஸ்தான் ராயல்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் சுப்மன் கில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி ஜெய்ஸ்வால், பட்லர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அணியின் ஸ்கோர் 4.2 ஓவரில் 32 ரன்னாக இருக்கும்போது ஜெய்ஸ்வால் 19 பந்தில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து சஞ்சு சாம்சன் களம் இறங்கினார். இவர் இந்த ஓவரில் இரண்டு பவுண்டரிகள் விளாசினார்.
அடுத்த ஓவரை ரஷித் கான் வீசினார். இந்த ஓவரில் பட்லர் 8 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரியான் பராக் இந்த ஓவரின் கடைசி பந்தில் ரன்ஏதும் எடுக்காத நிலையில் கேட்ச் கொடுத்தார். விக்கெட் கீப்பர் வேட் டக்அவட்டில் இருந்து தப்பினார்.
8-வது ஓவரை ரஷித் கான் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் ரியான் பராக் மீண்டும் கேட்ச் கொடுத்தார். இந்த முறையும் வேட் கேட்ச் பிடிக்க தவறினார். இதனால் 7 ரன்னில் இருந்து மீண்டும் ஒரு முறை தப்பினார்.
அதன்பின் சாம்சன்- ரியான் பராக் ஜோடி ஆட்டமிழக்காமல் விளையாடியது. 2 விக்கெட் மட்டுமே இழந்தாலும் அதிரடியாக ரன்கள் அடிக்க முடியவில்லை.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12.4 ஓவரில் 100 ரன்னைக் கடந்தது. ரியாக் பராக் 34 பந்தில் அரைசதம் அடித்தார். 16.5 ஓவரில் ராஜஸ்தான் ராயல்ஸ் 150 ரன்னைத் தொட்டது. அடுத்த பந்தை பவுண்டரிக்கு விரட்டிய சஞச்சு சாம்சன் 31 பந்தில் அரைசதம் அடித்தார்.
19-வது ஒவரில் ரியான் பராக் 48 பந்தில் 76 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது ராஜஸ்தான் ராயல்ஸ் 18.4 ஓவரில் 172 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து வந்த ஹெட்மையர் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். 19 ஓவர் முடிவில் 177 ரன்கள் எடுத்திருந்தது.
உமேஷ் யாதவ் கடைசி ஓவரில் 19 ரன்கள் விட்டுக்கொடுக்க ராஜஸ்தான் ராயல்ஸ் 196 ரன்கள் குவித்துள்ளது. சஞ்சு சாம்சன் 68 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
- ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தான் ஆடிய 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
- குஜராத் டைட்டன்ஸ் தான் ஆடிய 5 ஆட்டங்களில் 2 வெற்றி, 3 தோல்வி கண்டுள்ளது.
ஜெய்ப்பூர்:
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 24-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
மழை காரணமாக டாஸ் போட தாமதமானது. இரவு 7.25 மணிக்கு டாஸ் போடப்பட்டடது.
டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பேட்டிங் செய்கிறது.
- நடப்பு தொடரில் தோல்வியை சந்திக்காத ஒரே அணியாக ராஜஸ்தான் ராயல்ஸ் வலம் வருகிறது.
- குஜராத் டைட்டன்ஸ் இதுவரை 5 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 3 தோல்வி கண்டுள்ளது.
ஜெய்ப்பூர்:
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (புதன்கிழமை) ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடைபெறும் 24-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ராஜஸ்தான் ராயல்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் சந்திக்கின்றன.
நடப்பு தொடரில் தோல்வியை சந்திக்காத ஒரே அணியாக ராஜஸ்தான் ராயல்ஸ் வலம் வருகிறது. ராஜஸ்தான் அணி 20 ரன் வித்தியாசத்தில் லக்னோவையும், 12 ரன் வித்தியாசத்தில் டெல்லியையும், 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையையும், 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவையும் அடுத்தடுத்து சாய்த்தது. ஒவ்வொரு ஆட்டத்திலும் வெவ்வேறு வீரர் ஜொலித்து வெற்றிக்கு கணிசமான பங்களிப்பை அளித்ததோடு ஆட்டநாயகன் விருதையும் பெற்றனர்.
பேட்டிங்கில் கேப்டன் சஞ்சு சாம்சன், ரியான் பராக் ரன் மழை பொழிகிறார்கள். முதல் 3 ஆட்டங்களில் ஏமாற்றம் அளித்த ஜோஸ் பட்லர் கடந்த ஆட்டத்தில் சதம் விளாசி பார்முக்கு திரும்பி இருக்கிறார். தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மட்டும் தொடர்ந்து சொதப்புகிறார். முதல் 4 ஆட்டங்களில் 39 ரன்கள் மட்டுமே எடுத்துள்ள அவர் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். துருவ் ஜூரெல், ஹெட்மயர் போதுமான பங்களித்தால் மிடில் வரிசை மேலும் வலுப்பெறும். பந்து வீச்சில் டிரென்ட் பவுல்ட், நன்ரே பர்கர், யுஸ்வேந்திர சாஹல் மிரட்டுகிறார்கள். உள்ளூர் சூழல் அவர்களுக்கு கூடுதல் சாதகமாக இருக்கும்.
குஜராத் டைட்டன்ஸ் இதுவரை 5 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 3 தோல்வி கண்டுள்ளது. தனது முதலாவது ஆட்டத்தில் 6 ரன் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்திய குஜராத் அணி அடுத்த ஆட்டத்தில் 63 ரன் வித்தியாசத்தில் சென்னையிடம் பணிந்தது. அதற்கு அடுத்த ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை பந்தாடியது. கடந்த இரு ஆட்டங்களில் முறையே 3 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பிடமும், 33 ரன் வித்தியாசத்தில் லக்னோவிடமும் தோற்றது.
குஜராத் அணியில் பேட்டிங்கில் சுப்மன் கில், சாய் சுதர்சனும், பந்து வீச்சில் மொகித் ஷர்மா, உமேஷ் யாதவும் நல்ல நிலையில் உள்ளனர். டேவிட் மில்லர், விருத்திமான் சஹா காயத்தால் அவதிப்படுவது சற்று பின்னடைவாகும். அதே சமயம் வில்லியம்சன், விஜய் சங்கர், ரஷித் கான், நூர் அகமது ஆகியோர் தங்களது முழுதிறமையை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும். ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான் ராஜஸ்தானின் வெற்றிப்பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். இல்லாவிட்டால் சிக்கல் தான்.
இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் குஜராத் 4 ஆட்டத்திலும், ராஜஸ்தான் ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கின்றன.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
ராஜஸ்தான்: ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன்), ரியான் பராக், துருவ் ஜூரெல், ஹெட்மயர், ஆர்.அஸ்வின், டிரென்ட் பவுல்ட், அவேஷ் கான், நன்ரே பர்கர், யுஸ்வேந்திர சாஹல்.
குஜராத்: சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), வில்லியம்சன், ஷரத் அல்லது விருத்திமான் சஹா, விஜய் சங்கர் அல்லது அபினவ் மனோகர், ராகுல் திவேதியா, ரஷித் கான், உமேஷ் யாதவ், ஸ்பென்சர் ஜான்சன், நூர் அகமது, தர்ஷன் நல்கண்டே.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்